Friday, March 30, 2012

BOBEU Circular:2011-13/13 dated 29.03.2012


                                              *  நமது சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் !
                   *  தமிழ்நாடு பிராந்திய நிர்வாகத்துடன்(TN REGIONAL MANAGEMENT) கூட்டம் !
                                                            * நமது நிர்வாகிகளின் BRANCH  VISITS !
                                 * நமது அகில  இந்திய சங்கத்தின் (AIBOBECC) 12வது மாநாடு !
   

நமது சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் – இராஜபாளையம் :

நமது சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், 25-03-2012 அன்று இராஜபாளையம் நகரில் சிறப்புற நடைபெற்றது .  சேலம் மாநாட்டிற்குப் பின்பு நிகழ்ந்த முதல் செயற்குழுக் கூட்டத்திற்கு, தமிழ்நாடு முழுவதிலுமுள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன், புதிதாக வங்கியிலும் சங்கத்திலும் இணைந்த இளம் தோழர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். 

சங்கத்தின் செயல்பாடுகளும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளும் செயற்குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பகுதிவாரியான கிளைப்பிரச்சினைகளும்-அது தொடர்பான கோரிக்கைகளும் நிர்வாகத்துடன் பேசித்தீர்க்க முடிவு செய்யப்பட்டது.  சமீபத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த வங்கிக் கொள்ளைகளை கருத்தில் கொண்டு, நமது அனைத்துக் கிளைகளிலும் ஒரே மாதிரியான-கிளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே சமயத்தில் உணவு இடைவேளை( UNIFORM COMMON LUNCH RECESS  FOR ALL STAFF MEMBERS IN THE BRANCHES) மற்றும் வங்கி பணப்பரிமாற்ற (CASH BUSINESS TRANSACTION)  நேரத்தினை தற்போதுள்ள உணவு இடைவேளைக்குப் பிறகு உள்ள ஒரு மணி நேரத்தினை, மேலும் நீட்டிக்கக் கூடாது எனவும், அனைத்துக் கிளைகளிலும் CCTV மற்றும் நிரந்தர ARMED GUARDS நியமிக்கவும்   நிர்வாகத்தினை  வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கீழ்க்கண்ட புதிய செயற்குழு உறுப்பினர்கள் CO-OPTION முறையில் நியமிக்கப்பட்டனர் :

                     தோழர் R லோகநாதன்  - SERVICE BRANCH, சென்னை
                     தோழர் K  சோமசுந்தரம் -அரவக்குறிச்சி
                     தோழர் R கோவிந்தன்   - கிருஷ்ணகிரி
                     தோழர் D  மாரிமுத்து    - குழித்துறை

மேலும், நமது சங்கத்தின் சார்பில்1973ம் ஆண்டு முதல் நமது சங்கப் பணியிலும் செயற்குழுவிலும் பணியாற்றி இம்மாதம் பணி ஒய்வு பெறும் தோழர் R காசிநாதன் (நுங்கம்பாக்கம்) அவர்களுக்கு நமது சங்கப் பொதுச்செயலாளர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

தமிழ்நாடு பிராந்திய நிர்வாகத்துடன்(TN REGIONAL MANAGEMENT) கூட்டம் - கோயம்புத்தூர் :

தமிழ்நாடு பிராந்திய நிர்வகத்துடனான ( TN REGION)  நமது சங்க நிர்வாகிகள் கூட்டம் 27-03-2012 அன்று கோவையில் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது.  அக்கூட்டத்தில் நமது சங்கத்தின் சார்பில் தோழர்கள் S சந்திரசேகரன், தலைவர், K P சந்திரசேகரன், பொதுச்செயலாளர், S சௌந்தரராஜன்,செயலாளர்  மற்றும் K இரவிகோபால் ,துணைத்தலைவர்  ஆகியோர் கலந்துகொண்டனர். நிர்வாகத்தின் சார்பில் HRM அதிகாரிகளுடன் திரு J S I சந்திரன், இணை பிராந்திய மேலாளர்(DGM-TN REGION)  மற்றும்  திரு   V  செல்லையன்,  துணை  பிராந்திய மேலாளர்(AGM-DRM-TN REGION)  பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு பிராந்திய வளர்ச்சியில் நமது உறுப்பினர்களின் பங்களிப்பினை வெகுவாகப் பாராட்டிய திரு J S I சந்திரன் (DGM-TN REGION) அவர்கள், வருங்காலத்திலும் நமது சங்கம் இதே போன்று ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுகோள் விடுத்தார். நமது சங்கப் பொதுச்செயலாளர் தோழர் K P சந்திரசேகரன், நமது வங்கியின் வளர்ச்சிக்கு நமது சங்க உறுப்பினர்கள்   முழு  அளவில்  ஒத்துழைப்பு  அளிப்பார்கள்  என்று  கூறியதோடு,   நமது  சங்கத்தின்  கோரிக்கைகளை
திரு V செல்லையன், துணை பிராந்திய மேலாளர் (AGM-DRM-TN REGION) அவர்கள்  உடனுக்குடன் விவாதித்து தீர்த்து வைப்பதினை  வெகுவாகப்  பாராட்டினார்.

கிளை/ஊழியர் மற்றும் வங்கி தொடர்பான பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, பெரும்பாலான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், இம்மாதம் பணி ஓய்வு பெறும் திரு J S I சந்திரன், இணை பிராந்திய மேலாளர்(DGM-TN REGION)   அவர்களுக்கு சங்கத்தின் சார்பில்,  நமது  பொதுச்செயலாளர்  பொன்னாடை வழங்கி  பாராட்டினார்.

நமது நிர்வாகிகளின் BRANCH VISITS :

நமது  சங்க   நிர்வாகிகள்  தோழர்கள்   S சந்திரசேகரன், தலைவர்,  K P சந்திரசேகரன், பொதுச் செயலாளர், S சௌந்தரராஜன் ,செயலாளர்  K இரவிகோபால் துணைத்தலைவர்,   N ஜெகதீஸ்வரன்,  பொருளாளர்   மற்றும் D C சுப்பிரமணி ,P சுவாமிநாதன்-இணைச்செயலாளர்கள், இராஜபாளையம் ,சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர், மேலப்பாளையம் ,நெல்லை மற்றும் பாளையம்கோட்டை  கிளைகளுக்கு  26-03-2012 அன்று சென்று  நமது தோழர்களை சந்தித்தனர்.

மேலும் 27-03-2012 அன்று நமது நிர்வாகிகள்  சரவணம்பட்டி, துடியலூர், R S புரம், வடவள்ளி, கணபதி, கோவை மத்திய கிளை (COIMBATORE MAIN BRANCH)  COIMBATORE MICR,  மற்றும் COIMBATORE  RBO கிளைகளுக்கு  சென்று  புதிதாய் இணைந்த தோழர்களை  சந்தித்து சங்கம்  குறித்து  விளக்கினர்.

நமது அகில இந்திய சங்கத்தின் (AIBOBECC) 12வது மாநாடு – JALANDHAR-PUNJAB :

நமது அகில இந்திய சங்கமான AIBOBECCன் 12வது மாநாடு கடந்த மார்ச் மாதம் 3 மற்றும்  4ம் நாள் அன்று பஞ்சாப் மாநிலத்திலுள்ள JALANDHAR நகரில் சிறப்புற நடைபெற்றது. நமது சங்கத்திலிருந்து -11- DELEGATES & OBSERVERS  மாநாட்டில் கலந்து கொண்டனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தோழர் C H வெங்கடாசலம் மாநாட்டினைத் துவக்கி வைத்தார். மாநாட்டு முடிவில் நமது மாநிலத்தினைச் சேர்ந்த  தோழர் K P சந்திரசேகரன் அகில இந்திய துணைச்  செயலாளராகவும்(ASSISTANT SECRETARY), தோழர் S சௌந்தரராஜன் மற்றும் தோழர் R ரேணுகா மத்தியக் குழு உறுப்பினர்களாகவும்(CENTRAL COMMITTEE MEMBERS)  தேர்வு செய்யப்பட்டனர்

மாநாடு  தொடர்பான  AIBOBECCன் விரிவான சுற்றறிக்கை கிளைகளுக்கு தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

வாழ்த்துக்களுடன்
       
K P சந்திரசேகரன்
பொதுச் செயலாளர்